Ad Widget

மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் பயிலும் யாழ். மாணவன் விபத்தில் பலி

மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் பயிலும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மாணவன், விபத்தொன்றில் பலியாகியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் பயலும் மாணவர்கள் இருவர் பயணம் செத்த மோட்டார் சைக்கிள், ஜீப் வண்டியுடன் மோதியே விபத்துக்குள்ளாகியுள்ளது.

மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரும், யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் ஒருவர் மரணமடைந்துவிட்டதாகவும் மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் சென்.ஜோன்ஸ் கல்லூரியின் பழைய மாணவனான அமில்தன் மகேந்திரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

Related Posts