Ad Widget

மூவின மக்களும் ஒன்றிணைந்து செயற்பட்டால் நாடு துரித வளர்ச்சியடையும்

எமது நாட்டின் இனத்தின் ஒற்றுமை மற்றும் அதன் சமத்துவ தன்மைக்காக மூவின மக்களும் ஒன்றினைந்து செயற்படவேண்டும்.

24102015event

அப்போது நாடு துரித வளர்ச்சியினை பெற்றுக்கொள்ளும் என புனர்வாழ்வு, மீள் குடியேற்றம் மற்றும் இந்து விவகார அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்தார்.

இலங்கையின் ஒரே மக்கள் என்ற அமைப்பின் (Unity Mission trust) எற்பாட்டில் புதிய இலங்கையினை உருவாக்கும் நோக்குடன் புதிய உலகம், புதிய இலங்கை, புதிய வழிகள் போன்ற எண்ணக்கருவில் அமைந்த எட்டாவது இளைஞசர் மாநாடு நேற்று யாழ் சுண்டுக்குழி மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.

இம்மாநாட்டுக்கு பிரதம அதிதியாக புனர்வாழ்வு, மீள் குடியேற்றம் மற்றும் இந்து விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் கலந்துகொண்டார்.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்தார்

இந்த நிகழ்வில் இலங்கையின் ஒரே மக்கள் என்ற அமைப்பின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

Related Posts