Ad Widget

முள்ளிவாய்க்கால் இன அழிப்புக்கு சர்வதேச விசாரணை வேண்டும்

முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்காலில் தமிழ் மக்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடாத்தப்படவேண்டுமென முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் இனத்தவர் ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.

இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்யவுள்ள உள்ளக நீதிப்பொறிமுறை உட்பட ஜெனீவாத் தீர்மானத்தை நிறைவேற்றும் சட்டத்தரணி மனோரி முத்தெட்டுவேகம தலைமையிலான 11பேர் அடங்கிய குழுவினரிடம் குறித்த முஸ்லிம் இனத்தவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

மேலும் முல்லைத்தீவு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் குறித்துத் தெரிவித்ததுடன், முள்ளிவாய்க்கால் இன அழிப்புக்குச் சர்வதேச விசாரணை நடாத்தப்படவேண்டுமென இக்குழுவின் முன்னிலையில் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

அத்துடன், முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து வெளியேறிய முஸ்லிம்களின் இன்னல்கள் தொடர்பாகவும் எடுத்துரைத்தார்.

Related Posts