Ad Widget

முல்லைத்தீவு பாடசாலையில் வெடிபொருள் வெடிப்பு: எட்டு மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

முல்லைத்தீவு கொக்கிளாய் முகத்துவாரம் பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) வெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த வெடிப்பு சம்பவத்தினால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், எட்டு மாணவர்கள் மயக்கமடைந்துள்ளனர். மயக்கமடைந்த மாணவர்கள் மாஞ்சோலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மீன்பிடிக்க பயன்படுத்தப்படும் ஜெலெக் நைட் எனும் வெடிபொருள் வெடித்ததிலேயே குறித்த அனர்த்தம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

Related Posts