Ad Widget

முல்லைத்தீவில் ஹர்தால்

announcementமுல்லைத்தீவு நகரில் இன்று புதன்கிழமை ஹர்தால் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்களுக்கு ஆதரவு வழங்குவதற்காகவே இந்த ஹர்தால் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

வெளி மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோதமாக ஈடுபடும் மீன்படி நடவடிக்கையை நிறுத்தக் கோரி மூன்று மீனவர்கள் உண்ணாவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த போராட்டம் கடந்த திங்கட்கிழமை முதல் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்னாள் இடம்பெற்று வருகின்றனது. இந்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவதற்காக முல்லைத்தீவு நகரில் உள்ள வர்த்தகர்கள் கடைகளை மூடி போராட்டத்தில் இணைந்துள்ளனர்.

இதேவேளை, மீன்பிடி அமைச்சர் அல்லது அவரின் பிரதிநிதி அல்லது மாவட்ட செயலாளர் ஆகியோரில் ஒருவரினால் இது தொடர்பில் உறுதிமொழி வழங்கப்படும் வரை போராட்டம் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts