Ad Widget

முல்லைத்தீவில் கடும் காற்றுடன் மழை – வீடுகள் சேதம்

முல்லைத்தீவு விசுவமடுப் பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் வீசிய கடும் காற்று மற்றும் மின்னல் தாக்கத்தினால் வீடுகள் பல சேதமடைந்துள்ளன.

ஐந்து வரையான வீடுகளின் கூரைகள் பகுதியளவில் தூக்கி வீசப்பட்டுள்ளதுடன், பயன்தரு தென்னை மரங்கள் மற்றும் வாழை, பப்பாசி போன்ற மரங்களும் முறிவடைந்துள்ளன.

இதன்போது, வீட்டின் கூரைகள் வீசப்பட்டதில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இதேவேளை, குறித்த பகுதியில் மின்னல் தாக்கத்தில் மாணவன் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts