Ad Widget

முன்னாள் புலிப் போராளி கைது!

கிளிநொச்சி, ஆனந்தபுரத்தை சேர்ந்த தாமோதரம்பிள்ளை ஜெயகாந்த் என்ற முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர், விடுதலை புலிகள் இயக்கத்தில் ஊடறுப்பு பிரிவில் இருந்து புனர்வாழ்வு பெறவில்லை என்ற குற்றச்சாட்டில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் வவுனியா பயங்கரவாத தடுப்பு முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Posts