Ad Widget

முதலமைச்சர் – வடக்கு உள்ளூராட்சி மன்ற தலைவர்கள் சந்திப்பு

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிற்கும் மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

DSC_0145(3)

யாழ். பொது நூலகத்தில் அமைந்துள்ள வட மாகாண சபையின் கேட்போர் கூடத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. இலங்கை உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் உள்ளூராட்சி மன்றங்களினால் முன்னெடுக்கப்பட வேண்டிய பிரதேச மட்ட அபிவிருத்தி மற்றும் நிர்வாக ஒழுங்கு முறைகள், உள்ளூராட்சி மன்றங்களிற்கான சட்ட அமுலாக்கல் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்திலுள்ள 21 உள்ளூராட்சி மன்றங்களில் 17 உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் மட்டுமே இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர். ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சின் ஆட்சி அதிகாரத்தில் கீழிருக்கின்ற யாழ்.மாநகர சபை, நெடுந்தீவு பிரதேச சபை, வேலணை பிரதேச சபை மற்றும் ஊர்காவற்றுறை பிரதேச சபை ஆகியவற்றின் தலைவர்களை இந்த கலந்துரையாடலில் பங்கேற்கவில்லை.

Related Posts