Ad Widget

முதன் முறையாக அவைத்தலைவருக்கு செங்கம்பள வரவேற்பு

வடக்கு மாகாண சபையின் அமர்வுக்கு முதன் முதலாக செங்கம்பளத்தில் அவைத்தலைவர் செங்கோலுடன் அழைத்து வரப்பட்ட நிகழ்வு 19ஆவது சபை அமர்வான இன்று நடைபெற்றது.

வடக்கு மாகாண சபையின் அமர்வுகள் கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபையின் கட்டடத் தொகுதியில் நடைபெறுவது வழக்கும். ஆனால் இதுவரை காலமும் சபை அமர்வுக்கு செங்கோலுடன் மட்டுமே அவைத்தலைவர் அழைத்து வரப்படுவார்.

ஆனால் முதன் முறையாக இன்று நடைபெறும் 19ஆவது அமர்விற்கு அவைத்தலைவரின் அறையில் இருந்து செங்கம்பளத்தில் செங்கோலுடன் அவைத்தலைவர் அழைத்து வரப்பட்டார்.

தேவேளை, எதிர்வரும் காலங்களிலும் நடைபெறும் அமர்வுகளுக்கும் அவைத்தலைவர் செங்கம்பளத்திலேயே அழைத்து வரப்படுவார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Related Posts