Ad Widget

முக­மூ­டிக் கொள்­ளை­யர்­களை உடன் கைது செய்­ய­ வேண்­டும்!!

யாழ்ப்­பாண வர்த்­தக நிலை­யங்­கள் மூடப்­ப­டும் நேரத்­தில் வாள்­க­ளு­டன் வரும் முக­மூ­டிக் கொள்­ளை­யர்­களை கைது செய்­ய­வேண்­டும். அச்­சம் கார­ண­மாக வர்த்­த­கர்­கள் இரவு 7 மணி­யு­டன் கடையை மூடு­கின்­ற­னர். இது தொடர்­பில் துரித நட­வ­டிக்கை அவ­சி­யம்.

இவ்­வாறு யாழ்ப்­பாண மாவட்ட மூத்த பொலிஸ் அத்­தி­யட்­ச­க­ரி­டம், யாழ்ப்­பாண வர்த்­தக சங்­கப் பிர­தி­நி­தி­கள் வலி­யு­றுத்­தி­னர்.

யாழ்ப்­பாண நக­ரில் கடந்த சில நாள்­க­ளாக இர­வில் இலக்­கத் தக­டு­கள் அற்ற உந்­து­ரு­ளி­க­ளில், முகங்­களை மூடி­ய­வாறு வாள்­க­ளு­டன் வரும் கொள்­ளை­யர்­கள் வர்த்­தக நிலை­யங்­க­ளுக்குள் நுழைந்து கொள்­ளை­ய­டிக்­கின்­ற­னர்.

இரவு 10.00 மணிக்­குப் பின்பு பூட்­டிய வர்த்­தக நிலை­யங்­கள்­கூட தற்­போது இரவு 7 மணி­யு­டன் இழுத்து மூடும் நிலமை ஏற்­பட்­டுள்­ள­தாக யாழ்ப்­பாண வர்த்­த­கர்­கள் தெரி­விக்­கின்­ற­னர். இது தொடர்­பில் வர்த்­தக சங்­கத்­துக்­கும் தமது முறைப்­பா­டு­களை வர்த்­த­கர்­கள் மேற்­கொண்­டுள்­ள­னர்.

இதனை யாழ்ப்­பாண மாவட்ட மூத்த பொலிஸ் அத்­தி­யட்­ச­க­ரின் கவ­னத்­துக்கு நேற்­றுக் கொண்டு சென்­ற­தாக, வர்த்­தக சங்க உப­த­லை­வ­ரும், வடக்கு மாகா­ண­சபை உறுப்­பி­ன­ரு­மான இ.ஜெய­சே­க­ரன் தெரி­வித்­தார். உரிய நட­வ­டிக்கை எடுப்­ப­தா­கப் பொலி­ஸார் உறு­தி­ய­ளித்­துள்­ள­னர் என­வும் வர்த்­தக சங்க உப­த­லை­வர் குறிப்­பிட்­டார்.

Related Posts