Ad Widget

மீள்குடியேறிய குடும்பத்துக்கு தற்காலிக கொட்டகைகள் அமைக்க உதவி

வலிகாமம் வடக்கில் கடந்த 25 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் ஒன்றாக வீமன்காமம் பகுதியில் மீளக்குடியேறுவதற்கு தயாராகும் வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட குடும்பம் ஒன்றுக்கு 1 ½ இலட்சம் ரூபாய் பெறுமதியில் தற்காலிக கொட்டகை அமைக்கத் தேவையான உபகரணங்கள் வியாழக்கிழமை (23) வழங்கப்பட்டது.

சங்கானையைச் சேர்ந்த பசுமைப் புரட்சியாளன் செ.கோபாலகிருஷ்ணன் என்பவர் வழங்கிய உதவியானது மூன்று குழந்தைகளைக் கொண்ட பெண் தலைமைத்துவக் குடும்பமான பாலேஸ்வரன் காயத்திரி என்பவரின் குடும்பத்துக்கு வழங்கப்பட்டது.

வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், வலிகாமம் வடக்கு பிரதேச சபைத் தலைவர் சோ.சுகிர்தன், கொடையாளியான செ.கோபாலகிருஷ்ணன் ஆகியோரினால் குறித்த பொருட்கள் குடும்பத்தாரிடம் கையளிக்கப்பட்டது.

Related Posts