Ad Widget

மிஹின் எயார் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டாக்காவுக்கு சென்ற மிஹின் எயார் விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

Mihin_Lanka_Airbus_A320_KvW

இன்று காலை 7.30க்கு புறப்படவிருந்த விமானம், காலை 9.30க்கே புறப்பட்டது என்று பயணிகள் தெரிவிக்கின்றனர்.

விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக. அந்த விமானம் 10.45க்கு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் தரையிறக்கப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

159 பயணிகளுடன் புறப்பட்டு சென்ற எம்.ஆர்.எல்501 என்ற விமானமே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளது என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Posts