Ad Widget

மிருசுவிலில் புகையிரதம் – சிறிய ரக லொறி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற புகையிரதம் – சிறிய ரக லொறி வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் இருவர் படுகாயமைடந்துள்ளனர்.

கொடிகாமம் தவசிக்குளம் பகுதியை சேர்ந்த தயாபரன் என்பவரும் , அவரது இரு பிள்ளைகளுமே இவ்வாறு விபத்துள்ளாகியுள்ளனர்.

காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) பயணித்த புகையிரதத்துடன் , கொடிகாமம் மிருசுவில் வைத்திய சாலைக்கு அண்மையில் உள்ள புகையிரத கடவையில் சிறிய ரக லொறி மோதி விபத்துக்கு உள்ளானது.

இதேவேளை கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி இன்று காலை வந்துகொண்டிருந்த குளிரூட்டப்பட்ட புகையிரதத்துடன் அலவ்வா பகுதியில் கூலர் ரக வாகனம் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் கூலர் ரக வாகன சாரதி படுகாயமடைந்த நிலையில் அலவ்வாய் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts