Ad Widget

மிருக பிலியைத் தடுக்கக் கோரி தென்மராட்சியில் உண்ணாவிரதம்!

தென்மராட்சிப் பிரதேசத்தில் மிருகபலியைத் தடுக்கக் கோரி அறவழிப் போராட்டக் குழுவினர் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணிவரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போகின்றனர் என்று அறிவித்துள்ளனர்.

கைதடிச் சந்தியில் நடைபெறவுள்ள இந்தப் போராட்டத்தில் எழுதுமட்டுவாள், மிருசுவில், வரணி, மந்துவில், மட்டுவில், நுணாவில், கைதடி கிழக்கு, கைதடி வடக்கு, கைதடி மேற்கு ஆகிய ஊர்களில் உள்ள சில சைவத் திருக்கோயில்களில் உயிர்ப்பலி கொடுக்கும் வழமையை கைவிடவேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தவுள்ளனர்.

அத்துடன், வழிபாட்டிடங்களில் உயிர்ப் பலிக்குத் தடைச் சட்டம் கொண்டுவருமாறு கோரிக் கையெழுத்தியக்கத்தைத் தொடருகிறோம் என்றும், யாழ்ப்பாணத்தில் இதுவரை 3000 பேர் இவ்விண்ணப்பத்தில் கையொப்பமிட்டுள்ளனர் என்றும், வடக்கிலும் கிழக்கிலும் மலையகத்திலும் 10,000 கையெழுத்துக்களைத் திரட்டி அரசிடம் கொடுக்க உள்ளோம் என்றும் அறவழிப்போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Related Posts