Ad Widget

மின்சார நிலைய வீதியில் நிரந்தர போக்குவரத்து பொலிஸ் கண்காணிப்பு பிரிவு!

policeயாழ். மின்சார நிலைய வீதியில் நிரந்தர போக்குவரத்து கண்காணிப்பு பிரிவு விரைவில் அமைக்கப்படவுள்ளதாக யாழ்.தலைமையகப் பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி கே.சமிந்த டி சில்வா தெரிவித்தார்.

யாழ். பொலிஸ் நிலையத்தில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இவ் ஊடகவியலாளர் சந்திப்பில், ‘யாழ். மின்சார நிலைய வீதியில் தனியார் பேருந்துகள் மற்றும் ஏனைய வாகனங்களினால், போக்குவரத்து நெரிசல் இடம்பெறுகின்றது. போக்குவரத்து பொலிஸாரை இப்பகுதியில் நிறுத்தி போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை’ என ஊடகவியலாளர்கள் ஒருவர் கூறியதற்கு பதலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் தெரிவித்த அவர்,

‘குறித்த பகுதியில் குறிப்பிட்ட நேரத்தில் மாத்திரம் போக்குவரத்து பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அப்போது போக்குவரத்து நெரிசல் குறைவாக காணப்படுகின்றது. எதிர்வரும் காலங்களில் மின்சார நிலைய வீதியில் நிரந்தர போக்குவரத்து பொலிஸ் கண்காணிப்பு பிரிவு நிறுவப்படும்’ என்று அவர் மேலும் கூறினார்.

Related Posts