Ad Widget

மின்சாரம் தாக்கி கணவனும் மனைவியும் உயிரிழப்பு

சுன்னாகம் பகுதியில் மின்சாரம் தாக்கி கணவன் – மனைவி ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஐயனார் கோவில் பகுதியிலுள்ள வீடொன்றில் ஆலய உற்சவத்தையொட்டி நேற்று வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் அலங்கார வேலைகளில் ஈடுபட்டிருந்தபோதே இருவர் மீதும் மின்சாரம் தாக்கியுள்ளது.

இன்று காலை உறவினர்கள் அவ்வீட்டுக்குச் சென்றபோதே சம்பவம் தொடர்பில் தெரியவந்துள்ளதாக எமது செய்தியாளர் கூறினார்.

இது தொடர்பாக மேலதிக விசாரனையினை பொலிஸசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts