Ad Widget

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை!

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மின்சார சபையின் ஊடகப்பேச்சாளர் அன்ட்ரூ நவமனி இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.

பல அனல் மின் உற்பத்தி நிலையங்களில் எரிபொருளின் கையிருப்பு குறைந்தளவே காணப்படுவதாகவும், இதன்காரணமாகவே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்திலும் டீசலின் கையிருப்பு குறைவடைந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த மின் உற்பத்தி நிலையத்தினூடாக 149 மெகாவாட் மின்சாரம் தேசிய கட்டமைப்புடன் இணைத்துக் கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts