இளவாலைப் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (10) ஏற்பட்ட மினி சூறாவளி காரணமாக இளவாலை கன்னியர்மடம், இளவாலை பொலிஸ் நிலையம் மற்றும் புனித சென்.ஜேம்ஸ் யாகப்பர் ஆலயம் ஆகியவற்றின் கூரைகள் சேதமடைந்துள்ளன.
இளவாலைப் பகுதியில் நேற்று மழையுடன் கூடிய மின் சூறாவளியும் அடித்ததால், மேற்படி பொது இடங்கள் சேதடைந்தன.
இளவாலை பொலிஸ் நிலையத்தின் கூரை, சுழல்காற்றுக் காரணமாக தூக்கி வீசப்பட்டது.பொலிஸ் நிலையத்தை அண்டிய பகுதியில் சுழற்காற்றும் வீசியது.
இதனால், பொலிஸ் நிலைய கட்டட கூரை தூக்கி எறியப்பட்டது. அத்துடன், அருகில் இருந்த பாடசாலையின் விளையாட்டு அரங்கு கட்டட கூரைகளும் சேதமடைந்தன.
பனைமர காவோலைகள் காற்றில் பறந்து, மின்சார இணைப்புக்கள் வடங்களை துண்டித்தமையால், மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
இதனால் பொலிஸ் நிலையத்தின் சேவைகள் குறிப்பிட்ட நேரம்வரை பாதிக்கப்பட்டிருந்தது. பொலிஸ் உத்தியோகத்தர்களின் உதவியுடன் சேதமடைந்த கட்டட கூரைகளைச் சீர்செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.