Ad Widget

மிதிபலகை பயணம் இருவர் காயம்

வேகக்கட்டுப்பாட்டை இழந்த சிற்றூர்தி (மினிபஸ்) வீதியின் அருகில் இருந்த மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் சிற்றூர்தியில் பயணம் செய்த ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு மற்றுமொருவர் சிறு காயங்களுக்கும் உள்ளாகியுள்ளார்.இச் சம்பவம் நேற்று காலை 7.40 மணியளவில் மானிப்பாய் வீதி சண்டிலிப்பாய் சந்தியில் இடம்பெற்றுள்ளது.

இதில் மாதகல் துறைமுகத்தை சேர்ந்த இளைஞனான ஜெயக்குமாரன் சசிகரன் (வயது 27) என்பவர் படுகாயமடைந்தவராவார் மற்றும் சித்தன்கேணியை சேர்ந்த குடும்பஸ்தரான கதிரவேல் ராஜேஸ்வரன் (வயது 50) என்பவரே சிறுகாயங்களுக்கு உள்ளாக நேரிட்டது.

இது தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சிற்றூர்தியில் அதிகளவான பிரயாணிகள் பயணம் செய்த நிலையில் காயமடைந்த இருவரும் மிதி பலகையில் நின்றபடி பிரயாணம் செய்ததனாலேயே மேற்படி விபத்தில் சிக்குண்டதாக ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related Posts