யாழ் மாவட்ட செயலகத்தில் பொதுமக்களின் பிரச்சனைகள் தொடர்பாக முறைப்பாடுகளை செய்வதற்கு புதிய பிரிவொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது என மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். இந்த புதிய பிரிவு இன்று திங்கட்கிழமை முதல் இயங்கவுள்ளது என அவர் குறிப்பிட்டார்.
“யாழ் மாவட்டத்தில் நடைபெறுகின்ற பிரச்சினைகள் தொடர்பில் மக்கள் முறையிடுவதற்கு மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனை தவிர்க்கும் நோக்கில் யாழ் மாவட்டச் செயலகத்தில் புதிய பிரிவொன்று ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என அவர் தெரிவித்தார்.
இதன் மூலம் மக்கள் தங்கள் பிரச்சனைகள் தொடர்பில் எழுத்து மூலம் எமக்கு அறியத்தந்தால் மக்களின் பிரச்சனை தொடர்பில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.