கடந்த விஜயதசமி நன்னாளில் மானிடம் அறக்கட்டளையும் தெல்லிப்பளை தாய்மார் கழக இணையமும் இணைந்து தெல்லிப்பளை வைத்தியசாலை முன்பாக மானிடம் இயற்கை சுவையகத்தை ஆரம்பித்துள்ளன இதனை யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நந்தகுமாரன் ஐயா திறந்து வைத்தார்.
முற்றிலும் தாய்மார்களால் நடாத்தப்பட இருக்கின்ற இவ் உணவகம் இயற்கையான பழப் பானம் மோர் இலைக்கஞ்சி கூழ் குரக்கன் ரொட்டி, சத்து மா உருண்டை , எள்ளுப் பாகு, மோதகம் என எமது பாரம்பரிய இயற்கை உணவு வகைகளை சுவைக்க சந்தர்ப்பம் வழங்குகின்றது
எதிர்காலத்தில் இயற்கை வேளாண் பண்னணயில் உற்பத்தியாகும் மரக்கறிகளை கொண்டு இரசாயண தாக்க மற்ற உணவு வகைகளையும் பொது மக்கள் பெற வழிவகை செய்யவுள்ளது.
இயற்கையோடு வாழ்வோம் புற்றுநோயை வெற்றி கொள்வோம்