Ad Widget

மாநகர சபை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

யாழ். நவீன சந்தையில் கடமையாற்றும் மாநகர சபை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பு செய்வதால் நவீன சந்தைக்கடைகள் திறக்கப்படவில்லை.

muni-shop

யாழ். நவீன சந்தைப்பகுதியில் கடந்த 21ஆம் திகதி யாழ்.வர்த்தக சங்கத்தலைவர் என்.ஜெயசேகரம், யாழ்.மாநகர சபை ஊழியர் ஒருவரை தாக்கியதாகவும் இதற்கு அவர் மன்னிப்புக் கேட்கவேண்டும் எனவும் தாக்குதலுக்குள்ளான ஊழியருக்கு 5 இலட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்கவேண்டும் எனக்கோரியும் இந்த பணிப்பகிஷ்கரிப்பை ஊழியர்கள் செய்கின்றனர்.

இந்த பகிஷ்கரிப்பால் நவீன சந்தை கட்டடத் தொகுதியில் கழிவுகள் அகற்றப்படாமல் உள்ளன. கடைத்தொகுதிகளின் இரும்புக் கதவுகளை யாழ்.மாநகர சபை ஊழியர்கள் திறக்காமையால் கடைகள் திறக்கப்படவில்லை.

வர்த்தக சங்கத்தலைவர் மன்னிப்புக் கேட்கும் வரையில் தங்களின் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்ந்து நடைபெறும் என வடபிராந்திய ஐக்கிய தொழிலாளர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

Related Posts