Ad Widget

மாதா சொரூபம் அடித்து உடைப்பு

ஏழாலை மேற்கு பகுதியில் வீதியோரத்தில் வைக்கப்பட்டிருந்த சிறிய மாதா சொரூபம் ஒன்று, திங்கட்கிழமை (15) இரவு இனந்தெரியாதோர் சிலரால் அடித்து உடைக்கப்பட்டுள்ளது.

கடையொன்றில் சுவருடன் அமைக்கப்பட்டிருந்த மாதா சொரூபமே இவ்வாறு அடித்து உடைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்துடன் செவ்வாய்க்கிழமை (16) தொடர்புகொண்ட கேட்டபோது, தங்களுக்கு இது தொடர்பில் முறைப்பாடு எதுவும் கிடைக்கவில்லை என்று தெரிவித்தனர்.

Related Posts