Ad Widget

மாணவ தாதியர் பயிற்சிநெறிக்கு விண்ணப்பிக்கலாம்

மாணவ தாதியர் பயிற்சிக்கு ஆள்சேர்ப்பு செய்வதற்கான விண்ணப்பங்களை சுகாதார போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சு கோரியுள்ளது.

ஒவ்வொரு மாவட்டத்தினதும் சனத்தொகையை அடிப்படையாக கொண்டு மக்களின் விகிதாசாரத்துக்கேற்ப ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பகிர்ந்தளிக்க வேண்டிய எண்ணிக்கை தீர்மானிக்கப்படவுள்ளது.

இதற்கு விண்ணப்பிப்பவர்கள் 2015 அல்லது 2016 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரத்தில் விஞ்ஞானப் பிரிவில் தோற்றி 3 பாடங்களிலும் ஒரே அமர்வில் சித்தியடைந்திருக்க வேண்டும்.

விண்ணப்பதாரி 18 – 28 வயதுக்கு உட்பட்டவராகவும், திருமணமாகாதவராக இருத்தல் அவசியம். விண்ணப்ப கட்டணம் 300 ரூபா எனவும், ஓகஸ்ட் 31ஆம் திகதி விண்ணப்ப முடிவுத் திகதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நேர்முகப் பரீட்சையின் மூலம் தெரிவு நடைபெறும் என சுகாதார போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சின் செயலாளர் ஜனக சுகததாச அறிவித்துள்ளார்.

Related Posts