Ad Widget

மாணவி துஷ்பிரயோகம்: ஆசிரியர் கைது

மானிப்பாய்ப் பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவியொருவரை தனியார் வகுப்பில் வைத்து பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய ஆசியர் ஒருவரை கைது செய்ததாக மானிப்பாய் பொலிஸார் இன்று ஞாயிற்றுக்கிழமை (17) தெரிவித்தனர்.

சங்கானைப் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய ஆசிரியர் ஒருவர் மானிப்பாய் செல்லமுத்து மைதானப் பகுதியிலுள்ள வீடொன்றில் தனியார் வகுப்புக்கள் நடத்தி வருகின்றார்.

இந்நிலையில், இந்த வகுப்பிற்கு வந்த மாணவியொருவரை வீட்டில் வைத்து மேற்படி ஆசிரியர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அறிந்த அப்பகுதி மக்கள், மேற்படி ஆசிரியரை சனிக்கிழமை (16) பிடித்து தம்மிடம் ஒப்படைத்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

Related Posts