Ad Widget

மாணவர் ஒன்றியத் தலைவர் பிணையில் விடுதலை

யாழ். மேல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் டி.சிசீந்திரன் இரண்டு லட்சம் ரூபா சரீரப்பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

uni-student

யாழ்ப்பாண மேல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தபட்ட நிலையில், ஓகஸ்ட் மாதம் 25 ஆம் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

மோதல் சம்பவத்தில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்திய சாலையில் சிகிச்சை பெற்றுவரும் சிங்கள மாணவனின் முறைப்பாட்டின் பிரகாரம் மூன்று தமிழ் மாணவர்களை நேற்றைய தினம் கோப்பாய் பொலிசார் விசாரணைக்காக அழைத்தனர்.

uni-court-2

இந்த நிலையிலேயே இன்று யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் டி சிசீந்திரனை கோப்பாய் பொலிஸார் இன்றைய தினம் யாழ் மேல் நீதி மன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

uni-court-su

இவர் சார்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாகியுள்ளார். அது மாத்திரமன்றி பல்கலைக்கழக பீடாதிபதிகளும் இன்று நீதிமன்றில் ஆஜராகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts