Ad Widget

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை விரைவில் நீக்கப்படும் – ஜி.எல்.பீரிஸ்

மாகாணங்களுக்கு இடையேயான பயணத்தடை விரைவில் நீக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் 21ஆம் திகதி வரை தற்போது மாகாணங்களுக்கு இடையேயான பயணத்தடை அமுலில் உள்ளது.

இந்தநிலையில், பயணத்தடையை மேலும் நீட்டிப்பது குறித்து கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கான செயலணி தீர்மானிக்கும்.

எனினும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் வெளிநாட்டு இராஜதந்திரிகளிடம், மாகாணங்களுக்கு இடையேயான பயணத்தடையை நீக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

எனினும் எப்போது தடை நீக்கப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் குறிப்பிடவில்லை.

எவ்வாறிருப்பினும் நாட்டைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

Related Posts