Ad Widget

மழை தொடரும் : வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்தும் பிற்பகல்வேளைகளில் இடியுடன் கூடிய மழை சாத்தியப்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் புத்தளம் மாத்தளை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை ஓரளவு பெய்யும்.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

மேற்கு , தென்மேற்கு கடற்கரையோர பகுதிகளில் காலை வேளைகளில் மழை பெய்யும்.

எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் குறிப்பாக மத்திய, சப்ரகமுவ, கிழக்கு, வடமத்திய, ஊவா, மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி மாத்தறை மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றருக்கு அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.

பனிமூட்டமான காலநிலை மேற்கு சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளைகளில் காணப்படும்.

புத்தளத்திலிருந்து காங்கேசன்துறை திருகோணமலை மட்டக்களப்பு ஹம்பாந்தோட்டை ஊடாக காலி வரையிலான கடற்கரைபிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்றுவீசக்கூடும். பொதுமக்கள் இடிமின்னலிலிருந்து அவதானமாக இருக்குமாறு திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Related Posts