Ad Widget

மல்லாகம் நீதவானாக கறுப்பையா ஜீவராணி நியமனம்

மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவானாக கறுப்பையா ஜீவராணி நியமிக்கப்பட்டுள்ளாலர்.இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை காலமும் யாழ். சிறுவர் நீதவான் நீதிமன்ற நீதவனாக கடமையாற்றிய அவர், நீதி அமைச்சின் பரிந்துரைக்கு அமைய, இன்று புதன்கிழமை (18) முதல் அமுலுக்கும் வரும் வகையில் இந்த நியமனத்தை பெற்றுள்ளார்.

மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவானாக கடமையாற்றிய திருமதி ஜோய் மகிழ்மகாதேவன், கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஓய்வுபெற்றார். அதன் பின்னர், மல்லாகம் மாவட்ட நீதவானாக இருந்த சின்னத்துரை சதீஸ்தரன், நீதவான் நீதிமன்ற நீதவானாகவும் கடமையாற்றி வந்தார். இந்நிலையிலேயே தற்போது ஜீவராணி நியமிக்கப்பட்டுள்ளார்.

யாழ்.சிறுவர் நீதிமன்ற நீதவானாக, இதுவரை காலமும் யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவானாக கடமையாற்றிய பொ.சிவகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Posts