Ad Widget

மற்றுமோர் முன்னாள் போராளி திடீர் மரணம்!! அதிர்ச்சியில் மக்கள்!!!

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் பெண் போராளி ஒருவர் திடீரெ மரணித்துள்ளமை குடும்பத்தினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இரண்டு பிள்ளைகளின் தயாரான 29 வயதான சசிதரன் தாரிகா என்பவரே இவ்வாறு மரணித்துள்ளார். இவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மருத்துப் பிரிவு முன்னாள் போராளியாவார்.

இறுதி யுத்தத்தில் பலத்த காயமடைந்த நிலையில் வாழ்ந்து வந்த இவர் நேற்று மாலை ஏற்பட்ட திடீர் நெஞ்சுவலியை அடுத்து மரணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வன்னியில் உள்ள புலிகளின் மருத்துவ நிலையத்தில் யுத்த காலத்தில் போராளி மருத்துவராக கடமையாற்றிய இவர் போரில் காயமடைந்த மக்களுக்கும் போராளிகளுக்கும் சிகிச்சை அளித்தவர் என்னது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில தினங்களுக்கு முன்னரே விடுதலைப் புலிகள் அமைப்பின் மகளிர் அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த தமிழினி காலமானார். தற்பொழுது இவ் போராளியின் மரணும் மக்களிடையும் புனர்வாழ்வு பெற்ற போராளிகளிடையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts