Ad Widget

மற்றுமொரு மீனவரின் சடலம் மீட்பு

‘யாழ்ப்பாணம், குருநகர் கடற்பகுதியில் இருந்து கடந்த 30ஆம் திகதி, பாலைதீவு கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவா இருவர், கடலில் மூழ்கி காணாமல் போயிருந்த நிலையில், பாலைதீவு கடலில் இருந்து சடலமாக நேற்று ஞாயிற்றுக்கிழமை (03) மீட்கப்பட்டுள்ளனர்’ என யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

மகேந்திரபுரம் தூண்டி பகுதியினை சேர்ந்த பிறான்சிஸ் மக்காரியோஸ் (வயது 39), கஸ்தூரி பத்மசிறிதர் (வயது 50) ஆகிய மீனவர்களே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

மீன்பிடிப்பதற்காக மூன்று பேர், சென்றிருந்த நிலையில அவர்களில் ஒருவர் நீந்தி கரை சேர்ந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts