Ad Widget

மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு – ஒளடத இறக்குமதியாளர்கள் சங்கம்

ஒளடத இறக்குமதிக்கான முன்பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் நாணய கடிதத்தைப் பெறுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக மருந்துகளுக்கான தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என இலங்கை ஒளடத இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அத்தோடு, நாட்டில் இரண்டு மாதங்களுக்கு தேவையான மருந்துகளே கையிருப்பில் உள்ளதாகவும் அந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

ஒளடத இறக்குமதிக்காக முன்னர் வழங்கப்பட்ட முக்கியத்துவம் தற்போது வழங்கப்படுவதில்லையெனவும் அந்த சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

Related Posts