மல்லாகம் மாவட்ட நீதிமன்றின் ஆணைக்கு அமைவாக மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயம் பெறுநர் குழுவால் கையேற்கப்பட்டுள்ளதாக, சண்டிலிப்பாய்ப் பிரதேச செயலர் திருமதி யு.யசோதா அறிவித்தார்.
“மல்லாகம் மாவட்ட நீதிமன்றின் ஆணையின் பிரகாரம் மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத்தின் பெறுநர்களாக மல்லாகம் மாவட்ட நீதிமன்றின் பதிவாளர், இந்துக் குருமார் ஒன்றியத்தின் 2 மூத்த குருக்கள், யாழ்ப்பாண மேலதிக மாவட்டச் செயலர், வலி.தென்மேற்குப் பிரதேச செயலாளர், யாழ்ப்பாண மாவட்டச் செயலகக் கணக்காளர் ஆகியோர் நியமிக்கப்பட்டுனர்” என்று சண்டிலிப்பாய்ப் பிரதேச செயலர் மேலும் தெரிவித்தார்.