Ad Widget

மரம் சரிந்து விழுந்ததால் ஏ9 வீதி போக்குவரத்து தாமதம்

கிளிநொச்சியில்  பழமைவாய்ந்த மரம் முழுமையாக சரிந்து விழுந்ததில் பலமணிநேரம்  ஏ9 வீதி போக்குவரத்து தாமதமடைந்தது.

கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் நுறு வருடம் பழமைவாய்ந்த மரம் நேற்றிரவு   முழுமையாக ஏ9 வீதியில் சரிந்து விழுந்ததில் பலமணிநேரம் போக்குவரத்து தாமதமடைந்தது.

கிளிநொச்சி ஏ9 வீதி கந்தசுவாமி கோவில் அருகிலுள்ள இத்தி மரம் ஏ9 வீதியின் குறுக்கே மழைகாரணமாக சரிந்து  விழுந்ததில் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டதையடுத்து, கிளிநொச்சி மாவட்ட ஆனார்த்த முகாமைத்துவ அதிகாரிகள், இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரும் இணைந்து செயல்பட்டதால் நேற்றிரவு  போக்குவரத்தை விரைவுபடுத்த முடிந்தது.

Related Posts