Ad Widget

மன்னாரில் அழிக்கமுடியாத மலேரியாவைப் பரப்பும் ஆபத்தான நுளம்பு கண்டுபிடிப்பு!

கடந்த வருடம் மலேரியாவை முற்றாக ஒழித்த நாடுகளில் சிறீலங்காவை உலக சுகாதார நிறுவனம் இணைத்துக்கொண்டது.

இந்நிலையில் அழிப்பதற்கு மிகவும் கடினமானதும், மலேரியா நோயைப் பரப்பும் புதிய நுளம்பு வகையொன்று மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தலைமன்னாரின் பேசாலைப் பகுதியில் உள்ள கிணறுகளிலிருந்து இந்த நுளம்புவகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மலேரியா எதிர்ப்புத் திட்டத்தின் பணிப்பாளர் கலாநிதி ஹேமபால ஹேரத் தெரிவித்துள்ளார்.

இந்த நுளம்பின் விஞ்ஞானப் பெயர், அனோபிலெஸ் ஸ்டீபென்சி (Anopheles Stephens) ஆகும். இந்தியாவில் மலேரியா நோயைக் காவும் பிரதான நுளம்பு வகை இதுவேயாகும். ஆரம்பத்தில் வட இந்தியாவிலேயே இது கண்டறியப்பட்டது. பின்னர் குறுகிய காலத்திலேயே, தென்னிந்தியாவுக்கும் பரவி விட்டது.

இந்த வகையிலேயே சிறீலங்காவுக்கும் பரவியிருக்கும் என எண்ணப்படுகின்றது.

இந்த நுளம்பின் முட்டைகள் ஆய்வுக்காக கொழும்புக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதுடன், இதனை ஆராய்வதற்காக இந்தியாவின் மூத்த விஞ்ஞானிகளின் உதவி கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts