Ad Widget

மனைவியின் காது, மூக்கைக் கடித்துக் குதறிய கணவன்

மனைவியின் காது, மூக்கு என்வற்றைக் கடித்துக் குதறியுள்ளார் கணவன். தென்மராட்சிப் பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றது.

சவுதியில் இருந்து வந்த கணவன் தனது மனைவியுடன் வாக்குவாதப்பட்டுள்ளார். சவுதியில் மனைவியைக் கணவர் அடிப்பது தடைசெய்யப்பட்டுள்ளதாம். அங்கு கணவர்கள் மனைவியை அடிப்பதில்லையாம்.

மனைவியைத் தள்ளி கீழே விழுத்திவிட்டு அவர்களைக் கடித்தே காயம் ஏற்படுத்துவது வழக்கமாம்.

அவ்வாறே தனது கணவன் தன்னைத் தள்ளி வீழ்த்திவிட்டு தனக்கு மேலே ஏறியிருந்து தனது காதையும் மூக்கையும் கடித்துக் குதறியதாகத் தெரிவித்துள்ளார் பாதிக்கப்பட்ட மனைவி.

தற்போது மனைவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக பொலிசார் விசாரணை நடாத்தவுள்ளதாகத் தெரியவருகின்றது.

Related Posts