யாழ்ப்பாணம், மண்டைதீவு, சுடலைவெளி கடற்கரையில் மீனவர் ஒருவரின் சடலம் நேற்று வெள்ளிக்கிழமை (05) அதிகாலை கரையொதுங்கியுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.
மண்டைதீவைச் சேர்ந்த 7 பிள்ளைகளின் தந்தையான தேவசகாயம்பிள்ளை சார்ள்ஸ் ஞானதீபன் (வயது 41) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த புதன்கிழமை (03) கடலுக்கு மீன்பிடிக்க சென்ற இவர், காணாமற்போயிருந்தார். இதனையடுத்து, கடற்படையினரும் மீனவர்களும் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் இவரது படகு, அல்லைப்பிட்டி கடற்கரையில் வியாழக்கிழமை (04) கரையொதுங்கியிருந்தது.
கடலில் வீசிய கடும்காற்றால் படகு கவிழ்ந்து, நீரில் மூழ்கி இவர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.