Ad Widget

மகனை வெட்ட வந்தவர்களை தடுக்கமுயன்ற தந்தை வாள்வெட்டுக்கு இலக்கானார்!

மகனை வெட்டவந்தவர்களை தடுக்கச்சென்ற தந்தை வாள் வெட்டுக்கு இலக்காகிப் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

இச்சம்பவம் சம்பவம் நேற்று புதன்கிழமை இரவு 9 மணியளவில் கந்தரோடையில் இடம்பெற்றுள்ளது.

தீபாவளித் திருநாளான நேற்று பகல் இரு இளைஞர் குழுக்களுக்கு இடையே உடுவில் பகுதியில் மோதல் இடம்பெற்றுள்ளது.

இதன் தொடர்ச்சியாக இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நால்வர் குறிப்பிட்ட இளைஞனை வெட்டுவதற்க்கு முயன்றபொது அவர்களைத் தடுக்க முயன்ற தந்தையை வாளால் வெட்டி படுகாயப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார்கள்.

கழுத்திலும் கையிலும் வெட்டுக்காயங்களுக்கு இலக்கான நிலையில் அவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். கந்தரோடையைச் சேர்ந்த தேவராசா முரளிதரன் (வயது 39) என்பவரே காயமடைந்தவராவார். சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Related Posts