Ad Widget

பௌத்த மேலாதிக்கத்தின் அதியுச்ச நிலையே மட்டு.பிக்குவின செயற்பாடு: சிவாஜிலிங்கம்

மட்டக்களப்பு மங்களராமய விஹாரையின் தலைமை பிக்குவான அம்பிட்டிய சுமனரத்ன தேரர் அண்மையில் மட்டக்களப்பில் தமிழ் மக்களுக்கு எதிராக பிரயோகித்த வார்த்தைகள் மற்றும் அவரது செயற்பாடுகள் என்பன, சிங்கள பௌத்த மேலாதிக்கத்தின் அதியுச்ச நிலையை எடுத்துக்காட்டி நிற்கின்றதென குறிப்பிட்டுள்ள வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், இதனை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் திருகோணமலை மாவட்ட கட்சிக் காரியாலயத்தில் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

குறித்த தேரர் அண்மைக்காலமாகவே தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றார் என சுட்டிக்காட்டிய சிவாஜிலிங்கம், இவ்வாறான ஒரு சூழ்நிலையில் பதிய அரசியலமைப்பில் பௌத்தத்திற்கு முன்னுரிமை கொடுப்போம் என அரசாங்கம் தெரிவிக்குமானால், நாட்டில் ஒருபோதும் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாதென மேலும் குறிப்பிட்டார்.

Related Posts