Ad Widget

போலி வாக்குச் சீட்டுக்களுடன் மூவர் கைது

சாவகச்சேரி, கச்சாய் பகுதியில் போலி வாக்குச் சீட்டுக்களுடன் வாகனத்தில் சென்ற 3 சந்தேகநபர்களை நேற்று திங்கட்கிழமை (10) இரவு கைது செய்ததாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்ட வாகனத்திலிருந்தே இந்த போலி வாக்குச் சீட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் தேர்தல் சுவரொட்டிகள் சிலவற்றையும் கைப்பற்றியதாக பொலிஸார் கூறினர்.

வாகனத்தில் ஒலிபெருக்கியை கட்டியவாறு பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, குறித்த வாகனத்தை மறித்த பொலிஸார், அவ்வாகனத்தை சோதனை செய்தபோதே போலி வாக்குச் சீட்டுக்கள் கைப்பற்றப்பட்டன.

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts