Ad Widget

போரிற்கு உதவிய நீங்கள் தமிழர் தீர்வுக்கும் உதவுங்கள்; பாகிஸ்தான் அரசிடம் வணிகர் கழகம் கோரிக்கை

இலங்கையில் நடைபெற்ற போரிற்கு உதவிய பாகிஸ்தான் அரசு போர் முடிந்து 5 வருடங்களைக் கடந்த பின்னரும் தீர்வின்றி இருக்கும் தமிழ் மக்களுக்கு உதவ முன்வரவேண்டும் என யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தின் தலைவர் ஜெயசேகரம் பாகிஸ்தான் பிரதி உயர்ஸ்தானிகரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாகிஸ்தான் பதில் உயர்ஸ்தானிகர் நவ்ராஸ் அஹமட் ஹான் சிப்ரா யாழ். வணிகர் கழகத்திற்கு நேற்று விஜயம் மேற்கொண்டு அபிவிருத்தி குறித்து கலந்துரையாடினார்.அதன்போதே வணிகர் கழக தலைவர் இந்த வேண்டுகோளை விடுத்திருந்தார்.

Related Posts