Ad Widget

போக்குவரத்து சபை பஸ் மோதி ஒருவர் பலி

கிளிநொச்சி, ஸ்கந்தபுரம் கரும்புப் பிள்ளையார் ஆலயத்துக்கருகில் இன்று திங்கட்கிழமை (30) காலையில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் மோதியதில் இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளதாக அக்கராயன் பொலிஸார் தெரிவித்தனர்.

அக்கராயன் கண்ணகிபுரம் பகுதியை சேர்ந்த கிருஸ்ணபிள்ளை தயாளன் (வயது 31) என்பவரே இந்நத விபத்தில் உயிரிழந்தார்.

முட்கொம்பனில் இருந்து கிளிநொச்சிக்கு சென்றுகொண்டிருந்த பஸ், மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தவரை மோதியுள்ளது.

அதனையடுத்து படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்தி வந்தவரை, முதலில் அக்கராயன் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று, மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளார்.

சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து இடம்பெற்றதையடுத்து, பஸ் சாரதி மற்றும் நடத்துநர் ஆகியோர் அருகிலுள்ள இராணுவ முகாமுக்குள் ஒளிந்துகொண்டனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts