போக்குவரத்து ஒழுங்குகளை மீறும் சாரதிகளுக்கு தண்டப்பணத்தை செலுத்தும் காலம் நீடிக்கப்படவுள்ளது.
இதுவரைக்காலமும் தண்டப்பணம் செலுத்துவதற்கான காலம் 14 நாட்களாக இருந்தன. புதிய முறையின்படி அது 30 நாட்களாக நீடிக்கப்படவுள்ளது.
இதேவேளை விபத்துக்களின்போது காயங்களை ஏற்படுத்தும் அல்லது பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் சாரதி ஒருவர், தமது தண்டப்பணத்தை தாம் விரும்பிய நீதிமன்றத்தில் நீதிபதியின் முன் பிரசன்னமாகாது, பதிவாளரிடம் செலுத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதேவேளை குற்றங்களை தடுப்பதற்காக அனைத்து நகரங்களிலும் சீ.சீ.டிவி கமராக்கள் பொருத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.