Ad Widget

பொலிஸ் சேவையில் தமிழ் இளைஞர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகத்தேர்வு

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் இருந்து பொலிஸ் சேவையில் தமிழ் இளைஞர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகத்தேர்வு நேற்று (10) யாழ்.மத்திய கல்லூரியில் நடைபெற்றது.

police-interview

மேற்படி இரு மாவட்டங்களிலும் இருந்து 687 இளைஞர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். இதற்கான நேர்முகத்தேர்வே நடைபெற்றது.

கொழும்பில் இருந்து வருகை தந்துள்ள பொலிஸ் ஆட்சேர்ப்பு பிரிவினர், பொலிஸ் சேவைக்கு விண்ணப்பித்து நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டவர்களுக்கான முதலாவது நேர்முகத் தேர்வை நடத்தினார்கள்.

நேற்றய தினம் கல்விச் சான்றிதழ்கள் பார்வையிடப்பட்டதுடன், அவர்களுடைய உயரம் நெஞ்சு சுற்றளவு என்பன அளவிடப்பட்டுள்ளன.

இந்த நேர் முகப்பரீட்சைக்க சுமார் ஆயிரம் பேருக்கு மேல் சமூகமளித்திருந்தார்கள் என்பதும் குறிப்படத்தக்கதாகும்.

யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களை சேர்ந்த ஆண்கள் நேற்றய நேர்முகத் தேர்வுக்கு தோற்றியிருந்தனர்.

இதேவேளை வுனியா மாவட்ட இளைஞர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகத்தேர்வு இன்று (11) நடைபெறவுள்ளது

Related Posts