Ad Widget

பொலிஸார் துரிதமாக செயற்பட்டிருந்தால் வித்தியாவின் உயிரை காப்பாற்றியிருக்கலாம்!

பெற்றோர்கள் பிள்ளையைக் காணவில்லை என பொலிஸாரிடம் முறையிட்ட உடனேயே அவர்கள் நடவடிக்கை எடுத்திருந்தால், மாணவி வித்தியாவின் உயிரைக் காப்பாற்றியிருக்க முடியும் என வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வட மாகாண சபையின் 29வது அமர்வு நேற்று கைதடியிலுள்ள பேரவைச் செயலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட புங்குடுதீவு மாணவிக்கு அஞ்சலி உரை நிகழ்த்தப்பட்டது. அந்த உரையின்போதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

‘ஒரு கொடூரமாக கொலை இடம்பெற்றிருக்கிறது. இந்தக் கொலை இடம்பெறவேண்டிய அவசியம் இருக்கவில்லை. இது விடயம் தொடர்பாக யாழ்ப்பாணம் வந்துள்ள பொலிஸ்மா அதிபருக்கும் கடிதம் அனுப்பியுள்ளேன்’ எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

எது எவ்வாறு இருப்பினும் இதுபோன்ற சம்பவங்கள் இனியும் நடக்காதிருக்க நாங்கள் நடவடிக்கை எடுப்போம் எனவும் அவர் கூறினார்.

Related Posts