Ad Widget

பொலிஸாரிற்கு எதிராக நாடளாவிய ரீதியில் பல்கலை மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டம்

உயர் தேசிய கணக்கீட்டு டிப்ளோமா மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து நாடு முழுவதிலுமுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

கொழும்பில் கடந்த வாரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததோடு, பலர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

காயமடைந்த மாணவி சிகிச்சையின் பின்னர் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியிருந்த நிலையில் நேற்று அவர் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் மாணவர்கள் மீதான தாக்குதலை எதிர்த்து யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மாவட்டங்களில் நேற்று மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழக மாணவர்கள் பாரிய ஆர்ப்பாட்டங்களை நடத்த உத்தேசித்துள்ளனர்.

Related Posts