Ad Widget

பொலிஸாரின் தலையீட்டை அடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது

வவுனியாவில் இன்று முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்பட்ட மோதல், பொலிஸாரின் தலையீட்டை அடுத்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. அத்தோடு, ஆர்ப்பாட்டக்காரர்களும் கலைந்து சென்றுள்ளனர்.

கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள வடக்கு மாகாண அமைச்சர் ப.சத்தியலிங்கத்தை மீள இணைத்துக்கொள்ள வேண்டுமென வலியுறுத்தியே வவுனியாவில் மேற்படி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது அங்கு வந்த இளைஞர் குழுவொன்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, கைகலப்பும் ஏற்பட்டது.

இதனையடுத்து, வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் அவ்விடத்தில் குவிக்கப்பட்ட பொலிஸார் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்ததோடு, இரு தரப்பினரிடமும் கலந்துரையாடி அவர்களை கலைந்துசெல்லுமாறும் கேட்டுக்கொண்டனர். இதனையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றதோடு, பிரதேசத்தில் நீடித்த பதற்றமும் தணிந்தது.

Related Posts