Ad Widget

பொருத்து வீடுகள் பொருத்தமற்றவை என்பதே வடமாகாண சபையின் உறுதியான தீர்மானம்

பொருத்து வீடுகள் பொருத்தமற்றவை என்பதே வட மாகாண சபையின் உறுதியான தீர்மானம் என வட மாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற வட மாகாண சபையின் 2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மீதான விவாதத்தில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர்,

பொருத்து வீடுகள் பொருத்தமற்றவை என மாகாண சபை உறுதியான தீர்மானத்தை எடுத்திருக்கின்றது. அந்த தீர்மானம் இன்று மீளவும் உறுதி செய்யப்படுகிறது. மாகாண சபையின் தீர்மானமும் இதுவேயாகும். மற்றைய உறுப்பினர்களுக்கும் இதுவே தீர்மானமாகக் கூறப்படுகின்றது எனத் தெரிவித்தார்.

இதன்போது குறுக்கிட்டு பேசிய எதிர்கட்சி உறுப்பினர் தவநாதன், வடக்கு மற்றும் கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள 10 ஆயிரம் பொருத்தும் வீட்டு திட்டங்களுக்கு எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. வட மாகாணத்தில் மட்டும் சுமார் ஒரு இலட்சத்து 30 ஆயிரம் குடும்பங்களுக்கு வீடுகள் தேவையாக உள்ளது. எனவே இந்த வீடுகளைப் பெற விரும்பும் மக்கள் இதற்கு விண்ணப்பிக்கலாமே எனத் தெரிவித்துள்ளார்.

Related Posts