Ad Widget

பொரு­ளியல் வினாப் பத்திரம் எப்­படி வெளி­யா­னது

க.பொ.த. உயர்­த­ரப்­ப­ரீட்­சையின் முதல்நாள் 04 ஆம் திகதி காலை நடை­பெற்ற பொரு­ளியல் 1 வினாப்­பத்­திரம் பரீட்­சார்த்­தி­களின் கைக­ளுக்கு சென்­றது எப்­படி?

உண்­மையில் பரீட்­சைத்­தி­ணைக்­கள அறி­வித்­த­லின்­படி இப்­பத்­தி­ரத்­தி­லேயே பரீட்­சார்த்­திகள் விடை­ய­ளித்­தி­ருக்­க­வேண்டும். இது தொடர்­பாக அப்­பத்­தி­ரத்­திலே ஆரம்­பத்தில் தெளி­வாகக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

ஆனால் குறிப்­பிட்ட நிலை­யத்தில் பத்­தி­ரத்­திற்­குப்­ப­தி­லாக கட்­ட­மி­டப்­பட்ட வேறு பத்­திரம் வழங்­கப்­பட்டு அதில் பரீட்­சார்த்­திகள் விடை­ய­ளிக்­கு­மாறு கோரப்­பட்­டதாம். அத­னையே பரீட்­சைத்­தி­ணைக்­க­ளத்­திற்கு மதிப்­பீட்­டிற்­காக அனுப்­பி­யுள்­ளனர்.

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்­தி­லுள்ள பட்­டி­ருப்பு மகா வித்­தி­யா­லய பரீட்சை நிலை­யத்தில் இச்­சம்­பவம் இடம்­பெற்­றி­ருக்­கி­றது.

இலங்­கையில் வேறு எந்த பரீட்­சை­நி­லை­யத்­திலும் வினாப்­பத்­தி­ரத்தை பரீட்­சை­மு­டிய வெளி­யில்­கொண்­டு­செல்ல அனு­ம­திக்­க­வில்லை.அதே பத்­தி­ரத்தில் விடை­ய­ளிக்­கு­மாறு கோரி அத­னையே மதிப்­பீட்­டிற்­காக அனுப்­பி­யுள்­ளனர்.ஆனால் பட்­டி­ருப்பு பரீட்­சை­நி­லைய மாண­வர்­க­ளிடம் மாத்­திரம் 1ஆம் வினாப்­பத்­திரம் உள்­ளது. இது விட­யத்தில் பரீட்­சைத்­தி­ணைக்­களம் எவ்­வாறு நடந்­து­கொள்­ளுமோ தெரி­யாது.

ஆனால் இந்த பிரச்­சி­னையில் பரீட்­சார்த்­தி­க­ளான மாண­வர்கள் எவ்­வி­தத்­திலும் பாதிக்­கப்­ப­டக்­கூ­டா­தென்­பதே எமது கோரிக்­கை­யாகும்.இது­தொ­டர்பில் இலங்கை பரீட்சை ஆணை­யாளர் நாய­கத்­திடம் இலங்கைத் தமிழர் ஆசி­ரி­யர்­சங்கம் முறைப்­பா­டொன்றைத் தெரி­வித்­துள்­ளது.

சங்­கத்தின் தேசி­யத்­த­லைவர் வி.ரி.சகா­தே­வ­ராஜா இம் முறைப்­பாட்டை அறி­வித்­துள்ளார்.பத்­தி­ரங்­களின் பிர­தி­க­ளையும் அனுப்­பி­வைத்­துள்ளார்.

இது­வி­டயம் தொடர்பில் மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் பரீட்­சைக்குப் பொறுப்­பான உத்­தி­யோ­கத்­தரும் மட்­டக்­க­ளப்பு வல­யக்­கல்­விப்­ப­ணிப்­பா­ள­ரு­மான கண­ப­திப்­பிள்ளை பாஸ்­க­ர­னிடம் கேட்­ட­போது தமக்கு அன்று பிற்­பகல் 3மணி­ய­ளவில் பட்­டி­ருப்பு மகா­வித்­தி­யா­லய பரீட்சை நிலை­யத்தில் இம்­மு­றை­கேடு இடம்­பெற்­ற­தாக முறைப்பாடு கிடைக்கப் பெற்றதாகவும் இது தொடர்பில்பரீட்சை ஆணையாளரிடம் அறிவித்துள்ள தாகவும் தெரிவித்தார்.

அந்த பரீட்சை நிலையத்தில் பொருளியல் பாடம் எழுதிய பரீட்சார்த்திகள் எவ்விதத்திலும் பாதிக்கப்படக்கூடாதென்பதை மீளவும் வலியுறுத்துகின்றோம் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Posts