Ad Widget

பொப்பிசைச் சக்கரவர்த்தி A .E .மனோகரன் காலமானார்

இலங்கையின் பிரபல பாடகரும் நடிகருமான பொப்பிசைச் சக்கரவர்த்தி A .E .மனோகரன் காலமானார்.

நீண்ட காலமாக சென்னையில் வசித்து வந்த அவர் நேற்று இரவு 7.20 அளவில் காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர் பாடிய சுராங்கனி.. சுராங்கனி.. சுராங்கனிக மாலுகெனாவா… என்ற பாடல் இலங்கை, இந்திய ரசிகர்கள் மத்தியில் பேராதரவைப் பெற்றது

இந்திய தமிழ் சினிமாவில் “சிலோன் மனோகர்” என்று அழைக்கப்பட்ட அவர் காஷ்மீர் காதலி, தீ, அதே கண்கள், ராஜா நீ வாழ்க, காட்டுக்குள்ளே திருவிழா , உலகம் சுற்றும் வாலிபன், நீதிபதி, லாரி டிரைவர் ராஜாகண்ணு, காதல் கொண்டேன், பாண்டித்தியம், ஜே ஜே போன்ற சுமார் 75-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.

மேலும் மலையாளம், தெலுங்கு சினிமாவிலும் நடித்து புகழ் பெற்ற A .E .மனோகரன் இலங்கையில் தயாரிக்கப்பட்ட பாசநிலா, வாடைக்காற்று, புதிய காற்று திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

பல மொழிகளிலும் பாடல்கள் பாடுவதிலே திறமை வாய்ந்த A .E .மனோகரன் தனது அந்திம காலங்களில் தமிழ் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts